Home இலங்கை அரசியல் வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

வீடுகளை கையளிக்காமல் வெளிநாடு பறந்த முன்னாள் எம்.பிக்கள்: கடும் நெருக்கடியில் அதிகாரிகள்

0

மாடிவெல (Madiwela) நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் ஐந்து முன்னாள் எம்.பி.க்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீடுகளை கையகப்படுத்தும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் எண்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை வீடுகளை கையளித்துள்ளனர்.

எம்.பி.க்களின் வீடுகள்

இருபது எம்.பி.க்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் வழங்கும் பணி வரும் 3ம் திகதி தொடங்க உள்ளது.

சுமார் நாற்பது புதிய எம்.பி.க்கள் வீட்டு வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்ள் தெரிவிக்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version