Home இலங்கை குற்றம் முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

0

முல்லைத்தீவு (Mullaitivu) -செம்மலை பகுதியில் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு சிறப்புப் படை
முகாமின் என்.சி.பி. என்.சி.எஸ். விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால்
இவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று(1)கொக்கிளாய் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ பொறியியலாளர் படையின்
ஓய்வுபெற்ற கெப்டனும், கடைசியாக கொக்காவில் முகாமில் கடமையாற்றியவருமாவார்.
அவர் 2018 இல் ஓய்வு பெற்றுள்ளார்.

5 பேர் கைது

கைது செய்யப்பட்ட மற்றும் ஒருவர் ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர் ஆவார்,
கடைசியாக குருநாகல் தலைமையக காவல் நிலையத்தில் பணியாற்றி 2021 இல் ஓய்வு
பெற்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (2) முல்லைத்தீவு நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version