Home இலங்கை சமூகம் யாழில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது சிறுமி

யாழில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது சிறுமி

0

யாழில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சிறுமியொருவர் போகும் வழியிலேயே  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (28.04.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5
வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தில் இருந்து 7ஆயிரம் பேர் உத்தியோகபூர்வமாக வெளியேற்றம்

பொலிஸ் விசாரணை

சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச
வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள
நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விலை தொடர்பில் ஆய்வு செய்யும் குழு : தேவையான டொலர்கள் கையிருப்பில்

ஊழியர் சேமலாப நிதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version