மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமான இளைஞர், யுவதிகள்
வேலைவாய்ப்பின்றி இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ருமேனியா நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக
செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று (12) காலை மட்டக்களப்பு
கிரீன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு
இலங்கை வேலைவாய்ப்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன்
அப்ரோன் குழுமத்தினால் மேற்படி ருமேனியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக இளைஞர், யுவதிகள் அனுப்பப்படவுள்ளனர்.
ருமேனியா நாட்டிலிருந்து வருகை தந்த அந்த நாட்டு பிரதிநிதி ரொக்சானா தலைமையில் நேர்முகப் பரீட்சைகள் இடம் பெற்றன.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து சுமார் 350 இளைஞர்
யுவதிகள் குறித்த நேர்முக பரீட்சையில் பங்கெடுத்திருந்தனர்.
பிரச்சனைக்கு தீர்வு
இதன்போது, கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்
வேலை வாய்ப்பு பற்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறு வெளிநாடுகளில்
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக
நம்பிக்கையான நிறுவனங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அதிகமான
நிறுவனங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து நம்பகத்தனமான முறையில் இளைஞர்
யுவதிகளை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புகின்ற போது எமது மாவட்டத்தில்
நிலவுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார்.
