Home இலங்கை சமூகம் யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

0

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை நிலைமை இன்று முதல் படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழைப் பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (16) திறக்கப்படும் என குறித்த மாகாணங்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/50mm-heavy-rain-falls-weather-jaffna-in-tamil-1729042061

NO COMMENTS

Exit mobile version