Home இலங்கை சமூகம் இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

0

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் இந்தியாவில் (India) சென்று சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன் ஓட்டுநர், அறிவிப்பாளர் மற்றும் இருவர் என நான்கு பேரை வைத்து, 1,700 kg எடையினை கொண்ட( TATA) ஊர்தியை தனது தாடியில் கட்டி 510 மீட்டர் தூரம் கட்டியிழுத்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் இலங்கையில் (Sri lanka) வைத்து 4 உலக சாதனைகள் படைத்துள்ளார்.

உலக சாதனை

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் இறுதியில் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் அவர்களை அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/60-year-old-thiruchelvam-record-holder-in-india-1718260706

NO COMMENTS

Exit mobile version