600 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பழுதுபார்ப்பதற்காக முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட, 600 பேருந்துகள் இவ்வாறு சேர்க்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு
அத்துடன், பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் பிரதமரின் துணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணசேன உறுதிப்படுத்தினார்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
