Home முக்கியச் செய்திகள் இயற்கை பேரழிவால் செயலிழந்த மின்விநியோகம் : வெளியான அறிவிப்பு

இயற்கை பேரழிவால் செயலிழந்த மின்விநியோகம் : வெளியான அறிவிப்பு

0

 மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மின்வெட்டுகளில் சுமார் 86% தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த வானிலை காரணமாக 7.3 மில்லியன் மின்சார நுகர்வோரில் சுமார் 3.9 மில்லியன் பேருக்கு மின்வெட்டு ஏற்பட்டதாக அதன் துணை பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

மின்விநியோகத்தை சீரமைக்க கடுமையாக உழைக்கும் ஊழியர்கள் 

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து வருவதாக துணை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, விரைவில் மின் விநியோக முறையை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version