Home இலங்கை சமூகம் சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுமி!

சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுமி!

0

மட்டக்களப்பில் (Batticaloa) முஹமட் பஸ்லி ஸீனத்
எனும் சிறுமி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் 3 நிமிடம் 18 நொடிகளில் 140 பெருக்கல் கணக்குகளுக்கு
அபகஸ் முறை மூலம் தீர்வெழுதி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் (Kattankudy) அமைந்துள்ள மீரா
பாலிகா தேசிய பாடசாலையில் நேற்றையதினம் ( 16.10.2024) நடைபெற்றுள்ளது.

சோழன் உலக சாதனை

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் வசித்து வரும் 9 வயது சிறுமியே குறித்த சோழன் உலக சாதனையை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி ஸீனத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்,
தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை, மற்றும் பைல் போன்றவை சோழன்
உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த.
இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் தனராஜ், மட்டக்களப்பு மாவட்டப் பொதுச்
செயலாளர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான பர்சான் போன்றோரால் வழங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக ஷிப் அபாகஸ் அமைப்பின் அபிவிருத்தி முகாமையாளர்
இன்ஷாப் நவாஸ் மற்றும் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் துணைத்
தலைமை ஆசிரியர் நிருஷினி பிரதீபன் போன்றோர் உலக சாதனைச் சிறுமியை
வாழ்த்தி உரையாற்றியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version