அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி
காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு
காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி
காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்
சிறுவனை தேடும் பணி
இதையடுத்துப் பொலிஸார், கடற்படையினர், உயிர்காக்கும் பிரிவினர் மற்றும்
பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் கைது
இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண் நளினி
2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி : தேசிக்காயின் விலையும் அதிகம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |