Home இலங்கை சமூகம் யாழில் பால் புரையேறி பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை

யாழில் பால் புரையேறி பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை

0

யாழ்ப்பாணத்தில் பிறந்து 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது.

கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த ராகுல் ரேணுகா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை கடந்த 31 ஆம் திகதி பிறந்துள்ள நிலையில், குழந்தையின் நிறை குறைவு காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியில் குறித்த
குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனைதொடர்ந்து, குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டதுடன் இன்றையதினம்(19) உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிசுவின் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version