Home இலங்கை சமூகம் யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி

0

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல்
சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச்
சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளான்.

திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார்.

இருப்பினும்
சிகிச்சை பலனின்றி நேற்று (03) மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version