Home இலங்கை சமூகம் சூட்சுமமான கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர்: காவல்துறையில் முறைப்பாடு

சூட்சுமமான கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர்: காவல்துறையில் முறைப்பாடு

0

கம்பளையில் (Gampola) வீடொன்றில் இருந்த தங்க ஆபரணத்தையும், நாய் குட்டியொன்றும் திருடப்பட்டமை தொடர்பில் புபுரஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் நேற்றைய தினம் (17) பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பன்விலத்தென்ன முல்கா மவத்தையைச் சேர்ந்த நதிசா குமுது குமாரி பண்டார என்பவர் செல்லப்பிராணிகளை விற்பனை செய்வதுடன் அது தொடர்பில் அவர் முகநூலில் விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த பதிவினை பார்த்த கண்டி (Kandy) பொல்கோல்ல பகுதியை சேர்ந்த தம்பதியினர் நேற்றைய தினம் செல்லப்பிராணி விற்பனை செய்யும் அந்த வீட்டிற்கு சென்றுள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாததால் அங்கிருந்த 16,5000 பெறுமதியான  தங்க நகைகளையும், 45000 பெறுமதியான நாய் குட்டி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் முறைபாடு செய்ததையடுத்து கவால்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version