தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய சோதிடர்களில் ஒருவரான சந்திரசிறி பண்டார இன்று (22.04.2024) காலமானார்.
அவர் இன்று அதிகாலை திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கைக்குரிய சோதிடர்
தென்னிலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் பலருக்கு நம்பிக்கைக்குரிய சோதிடராக விளங்கிய சந்திரசிறி பண்டார, 63வது வயதில் மரணமடைந்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/a-famous-astrologer-of-south-lanka-passed-away-1713790380
