Home இலங்கை சமூகம் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் தாக்குதல்

உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் தாக்குதல்

0

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அடையாளம் தெரியாத சிலரால் உயர்தர வகுப்பு மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதால் மாணவன் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி

இதன் காரணமாக காயமடைந்த மாணவன் அங்கு நின்றவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version