Home இலங்கை சமூகம் யாழில் மாணவி ஒருவர் டிப்பர் மோதி பலி

யாழில் மாணவி ஒருவர் டிப்பர் மோதி பலி

0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். 

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான மாணவியே இன்றையதினம் (10.09.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த
மாணவியை டிப்பர் மோதியது.

மரண விசாரணைகள்

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை
அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். 

NO COMMENTS

Exit mobile version