Home இலங்கை அரசியல் மட்டக்களப்பிற்கும் அதிவேக நெடுஞ்சாலைகள்: மொட்டு வேட்பாளர் உறுதி

மட்டக்களப்பிற்கும் அதிவேக நெடுஞ்சாலைகள்: மொட்டு வேட்பாளர் உறுதி

0

எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தியடையும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (10.09.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது.

அபிவிருத்தி

தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன்.

இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன்.

சிந்தனையுடைய இளைஞர்களை உங்களது எதிர்காலத்தை திட்டமிட என்னோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

NO COMMENTS

Exit mobile version