Home இலங்கை சமூகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – கடுகன்னாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாய், தந்தை மற்றும் மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

கண்டி -மெனிக்டிவல பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version