மட்டக்களப்பு (Batticaloa) – கல்முனை பிரதான வீதியின்
செட்டிபாளையத்தில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து
களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி அதே திசையில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்
சொந்தமான பேருந்தில் மோதியுள்ளது.
மூன்று பேர் காயம்
இந்த விபத்தில் தெய்வாதீனமாக இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள்
உயிர் தப்பியுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி
உட்பட மூன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
குறித்த நோயாளர் காவு வண்டி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனையிலிருந்து, களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம்
ஒன்றுக்காக சென்ற வேளையிலேயே விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி, விசேட தாதிய
பரிபாலகி, மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று போர் இதில்
காயமடைந்துள்ளனர்.
எனினும் நோயாளர் காவு
வண்டியின் முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,
பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இது குறித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
