தமது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி சட்டத்தை ஒரேபாதையில் நகர்த்துவதோடு, எதிர்பாராத கைதுகளை மேற்கொள்ளும் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாராயணன் பிள்ளை சிவனந்தராஜா தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நீதி நிலைநாட்டப்படும், ஊழல்கள் வெளிப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்தனர்.
அந்த வகையில், தற்போது ஆட்சிக்கு வந்ததும் மேடைகளில் முன்வைத்த உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக மக்களிடையே கருத்து நிலவி வருகின்றது.
மேலும்,
தேசிய மக்கள் சக்தியில் பெரும்பாலான தமிழர்கள் உள்ளடக்கப்படாமைக்கான காரணம் என்ன?
இலங்கை அரசியலில் எதிர்கால திட்டமிடல்களை அநுர அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
[U1XBQGR}
https://www.youtube.com/embed/z2fKBNt4DoU