Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு! களத்தில் எதிர் தரப்புக்கள்

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு! களத்தில் எதிர் தரப்புக்கள்

0

உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செயல்முறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை, மார்ச் 28 ஆம் திகதி வரை செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது.

இருப்பினும், முன்னாள் எதிர்க்கட்சி அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான பல மூத்த உறுப்பினர்கள் ஏற்கனவே இந்த வழக்கைத் தாக்கல் செய்து, மார்ச் 20 ஆம் திகதிதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறையை மார்ச் 28 ஆம் திகதி வரை நீடித்திருந்தனர்.

புதிய அரசியல் கட்சி

நாட்டு மக்கள் புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழப்பது நியாயமற்றது என்று கூறி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறுவது குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், உள்ளூராட்சி தேர்தல்கள் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்றும் அறியப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version