Home முக்கியச் செய்திகள் யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள்
இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும்
அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள்
நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் பலர் கடல்
விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் புகைப்படங்கள் எடுப்பது, கடலில்
குளிப்பது நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொந்தளிப்பான நிலை

தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பலமான காற்று வீசுவதுடன், கடலும்
கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில்
கொண்டு யாரும் கடலுக்குள் இறங்க வேண்டாம் எனவும், கடலுக்கு மிக அண்மித்த
பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version