“க்ளீன் ஶ்ரீ லங்கா” செயற்திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கரில் காடு வளர்ப்பு மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுற்றாடலைப் பாதுகாக்கும் கருத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த காடு வளர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
காடு வளர்ப்பு
க்ளீன் ஶ்ரீ லங்கா செயற்திட்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
மே மாத இறுதிக்குள் மேற்குறித்த காடு வளர்ப்பு செயற்திட்டத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
you may like this
