Home இலங்கை சமூகம் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு முற்றுப்புள்ளி: நடைமுறையாகும் புதிய திட்டம்

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு முற்றுப்புள்ளி: நடைமுறையாகும் புதிய திட்டம்

0

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சு ஆகியவற்றுடன் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை சுங்கத்துடனும் நேற்று (10) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோக்கம்

பணமோசடி அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல் போன்ற காவல்துறையினரால் நடத்தப்படும் விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள உடன்பாடுகளை எட்டுவதே இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் நீண்டகாலமாக காவல்துறை விசாரணைகளுக்கான தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் குறைவதோடு, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நல்ல அனுபவமுள்ள அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்துவதன் மூலம் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version