Home இலங்கை அரசியல் மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

பதப்படுத்துவதற்கான தேவை

எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார்.

You May Like This


NO COMMENTS

Exit mobile version