Home இலங்கை அரசியல் ஜப்பானுக்கு பறக்கவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானுக்கு பறக்கவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

0

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry), எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி ஜப்பானுக்கு (Japan) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவோவின் (Yōko Kamikawa) அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, அந்த நாட்டின் முக்கிய தரப்பினரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்

அத்துடன், ஜப்பானிய அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமாசா ஹயாஷியையும் (Yoshimasa Hayashi )அலி சப்ரி சந்திக்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா கடந்த மே மாதம் இலங்கைக்கு பயணம் செய்த போது கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் குறித்து இந்த பயணத்தின் போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/ali-sabry-to-japan-next-july-1st-1719403311

NO COMMENTS

Exit mobile version