நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணம் உள்ளூராட்சி தேர்தல் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணம்
வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளமையே பாடசாலைகள் மூடப்படுவதற்கான காரணமாகும்.
மூடப்பட்ட பாடசாலைகள் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
