புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் பல
பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் (11) 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும்
மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதித்த போது
மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல்
வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நோயாளர் காவு வண்டி தேவை
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி
உடல்நலக் குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை
நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு
சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக
சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை
காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்
இருந்து கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும்
பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
மணிக்கணக்கில் காத்திருப்பு
இதன்பின் சுமார் 3மணிநேரத்தின் பின் மாணவியும் தந்தை வைத்தியசாலை வைத்தியரிடம்
சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது வைத்தியர் வைத்தியசாலையில்
நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மற்ற நோயாளர்களை ஏற்றி செல்வதற்காக மணிக்கணக்கில் நோயாளர் காவு வண்டி காத்திருந்துள்ளது.
இது தொடர்பாக வைத்திய அதிகாரியுடன் குறித்த மாணவியின் தந்தை கேட்டபோது, எல்லா நோயாளர்களுடன் தான் கொண்டு செல்ல வேண்டும், அப்படியாயின் உங்களது சொந்த செலவில் நோயாளர ்காவு வண்டியில் கொண்டு செல்லவும் என முரண்பாடாக பேசியுள்ளனர்.
நிர்வாகத்தின் அலட்சிய செயற்பாடு
இதுமட்டுமன்றி குறித்த மாணவயின் தந்தை ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவித்த போது அதனையும் அங்கிருந்த பொலிஸாரிடம் தெரிவித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும் மாணவியை தனியார் வைத்தியசாலைக்கு தான் அழைத்து செல்வதாக குறித்த தந்தை கூறிய போது கடிதமொன்றை எழுதிதந்து விட்டு அழைத்து செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது குறித்த சிறுமியை தருமப்புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
