யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அரசின் நிவாரண பொதிகளுடன்
கூடிய அமெரிக்க விமானம் நேற்று(08.12.2025) காலை தரையிறங்கியது.
குறித்த நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் இலங்கை விமானப்படை
அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
நிவாரணப் பொதிகள்
இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நிவாரணப் பொதிகள் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் விமானப் படை அதிகாரிகளால்
கையளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்துக்கென 192 பிறீமா நூடில்ஸ் பெட்டிகளும் 150 கோதுமை மா
மூடைகளும் கையளிக்கப்பட்டது.
