Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறையில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி: மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம

ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறையில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி: மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம

0

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்டச் செயலாளர் சிந்தக
அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேர்தல் வாக்குகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை
(ஆசனங்கள்) 04 ஆகும்.

அதன்படி, தொகுதிகள் பின்வருமாறு, அம்பாறை 188,222 பேர்,
சம்மாந்துறை 99,727 பேர், கல்முனை 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653
பேர் ஆகும்.தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை
27,645 ஆகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26,778 எனவும் 867
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

42 மையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்பதுடன் ஹார்டி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி
நடைபெறவுள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 184
வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்களும்,
கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவிலில் 177 வாக்களிப்பு
நிலையங்களும் உள்ளடங்கலாக அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்கள்
நிறுவப்படவுள்ளன.

தற்போது, சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதிகள்
மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு தபால் மூல வாக்குகளை வழங்குவதற்கான பயிற்சி
மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், எதிர்காலத்தில் சபை செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு
பயிற்சி அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version