Home இலங்கை கல்வி பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் – கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை விடுமுறை காலம் நிறைவடைந்து இன்றுடன் இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றது.

இன்றைய தினம் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் மீள் ஆரம்பிக்கப்படும் கல்வி அமைச்சு (Ministry of education) அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் 

இதேவேளை, நோன்புப் பெருநாளை ஒட்டி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று ஏப்ரல் 1ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கல்வியமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாளுக்காக திங்கட்கிழமை (31) ஏற்கெனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை 1ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பதில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version