Home இலங்கை கல்வி பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு  (Ministry of Education) தெரிவித்துள்ளது.

இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்கள்  

இதேவேளை, வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version