Home இலங்கை சமூகம் இரண்டு கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

மாத்தறை (Matara) சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விடயம்  தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இரண்டு கைதிகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version