Home இலங்கை சமூகம் மொட்டு உறுப்பினர்களுடன் களமிறங்கும் ரணில்: நிச்சயமற்ற நிலையில் கோட்டாபய

மொட்டு உறுப்பினர்களுடன் களமிறங்கும் ரணில்: நிச்சயமற்ற நிலையில் கோட்டாபய

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பதுக்கும் மேற்பட்ட அரசாங்க உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒன்று கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடவத்தை நகரில் நாளை (21) நடைபெறவுள்ள ‘ஒன்றாக எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் பேரணியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த பேரணியானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச

இதுவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) இந்த பேரணியில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த போதிலும், உடல் நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களான 19 பேரில் ஏறக்குறைய பதினைந்து பேர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version