Home இலங்கை சமூகம் அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

0

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பாறை (Ampara) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (20) காரைதீவு சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நியமனம் 

ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தி தருமாறும் பல்வேறு பதாகைகளையும், கோசங்கள் எழுப்பியும் இந்த போரட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version