Home இலங்கை சமூகம் மற்றுமொரு பாடசாலை மாணவி வன்புணர்வு : அதிபர் – ஆசிரியர் கைது!

மற்றுமொரு பாடசாலை மாணவி வன்புணர்வு : அதிபர் – ஆசிரியர் கைது!

0

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரும் மஹவெல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஹவெல காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மாணவி வன்புணர்வு

12 வயது சிறுமி, தான் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுமி பாடசாலை பிரதி அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் யாரிடமும் கூற வேண்டாம் என பிரதி அதிபர் சிறுமியிடம் கூறியுள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினரால் கைது

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான ஆசிரியர் மற்றும் 49 வயதான பிரதி அதிபர் ஆகியோர் மஹவெல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version