மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோயினாக ஆனந்தி நடித்து இருப்பார். பெரிய அளவில் பேசப்பட்ட அந்த படத்தில் முதலில் நடிக்க அனுபமா பரமேஸ்வரனை தான் அணுகினாராம் இயக்குனர்.
அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றி தற்போது வருத்தமாக பேசி இருக்கிறார் அனுபமா.
வருத்தம்
“இயக்குனர் மாரி செல்வராஜ் என்னிடம் கதை சொன்னபோது நான் நிறைய தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தேன். அதனால் நடிக்க முடியாமல் போனது.”
“அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதற்கு பிறகு அவர் துருவ் உடன் பைசன் படத்தில் நடிக்க அணுகினார். ஒப்புக்கொண்டேன்” என அனுபமா கூறி இருக்கிறார்.
