Home இலங்கை அரசியல் பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

பொலிஸார் தொடர்பில் அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

0

பொலிஸாருக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் திருத்த மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவி இன்று பொறுப்பேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 பொலிஸாருக்கு வாய்ப்பு

பொலிஸ் தரப்பில் இதுவரை நடந்த தவறுகளை சரி செய்ய பொலிஸாருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அழுத்தங்களினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம்  இனிமேல் இடம்பெறாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமான தீர்வுகளை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீடுகள்

பொலிஸாரின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை உடைந்து அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ மட்டத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version