Home இலங்கை அரசியல் ஆறு மாதங்களில் நாட்டை மீட்பதாக ஜனாதிபதி கூறவில்லை

ஆறு மாதங்களில் நாட்டை மீட்பதாக ஜனாதிபதி கூறவில்லை

0

ஆறு மாதங்களில் நாட்டை மீட்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிது சமன் ஹேன்னாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுக் கொண்ட போது, நாடு கடுமையான நெருக்கடி நிலையில் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 77 ஆண்டுகளாக அழிவுப்பாதையில் சென்ற நாட்டை ஏழு மாதங்களில் மீட்டெடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version