Home முக்கியச் செய்திகள் அநுரவின் அதிரடி உத்தரவு : கட்டுநாயக்கவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அநுரவின் அதிரடி உத்தரவு : கட்டுநாயக்கவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

0

இலங்கையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையத்திற்கு சென்ற போதும், குடிவரவு அதிகாரிகளால் (Department of Immigration) அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேருடைய பெயர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு

ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது நாட்டில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.

https://www.youtube.com/embed/a-QaAajXUZs

NO COMMENTS

Exit mobile version