Home இலங்கை பொருளாதாரம் உர மானிய அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

உர மானிய அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

0

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் அவர், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

திறைசேரிக்கு பணிப்பு 

இதற்கமைய, ஒரு ஏக்கருக்கு15,000 ரூபாவில் இருந்து ரூபா 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கடற்றொழிலுக்கான எரிபொருள் மானியம் வழங்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு திறைசேரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version