தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும் இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று(02.09.2025) நடந்த தெங்கு முக்கோண தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கும் மாட்டோம் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் குறிக்கோளுடனேயே நாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய இனவாத கோஷங்களுக்கு எதிரான முற்போக்கான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் பின்னோக்கி நகர்த்த மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
