யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(27) இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி செம்மணி மனிதப்
புதைகுழியை பார்வையிட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
