Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

0

இலங்கை ஜனாதிபதிக்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலேசானை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவவும் (Duminda Hulangamuwa), ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் அனில் பெர்ணாண்டோவும் (Anil Fernando) ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை அங்கீகாரம் 

அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னர் ஜனாதிபதி தனக்கான பணியாளர்களை நியமிக்கலாம், அரசமைப்பில் இதற்கு இடமுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இரண்டு நியமனங்களும் செப்டம்பர்  24 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவை கௌரவ பதவிகள் எனவும் எந்த சம்பளமோ அல்லது வேறு நன்மைகளோ வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version