Home இலங்கை அரசியல் அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு அநுர அரசில் முக்கிய பதவி

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு அநுர அரசில் முக்கிய பதவி

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளராக அரகலய(Aragalaya) போராட்ட ஆர்வலர் திலான் சேனநாயக்க(Dilan Senanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய பணிப்பாளர் குழு நேற்று (பெப்ரவரி 5) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சில் நியமிக்கப்பட்டது.

நியமன கடிதத்தை வழங்கி வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நியமனக் கடிதங்களை வழங்கினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி சுபுன் விஜேரத்னவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version