Home சினிமா அடுத்த 100 கோடி வசூல் படம் ரெடி.. அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல்

அடுத்த 100 கோடி வசூல் படம் ரெடி.. அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல்

0

அரண்மனை 4

2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் படமாக அரண்மனை 4 அமைந்தது. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.

அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் அமரன்.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்

அதனை அரண்மனை 4 படத்தில் மாற்றி, வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்ட விதம் படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

அரண்மனை 5

பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், அரண்மனை 5 எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில், அரண்மனை 5 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், அரண்மனை 5 படத்திற்காக வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version