Home இலங்கை அரசியல் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சபையில் உறக்கிய அர்ச்சுனா எம்.பி

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சபையில் உறக்கிய அர்ச்சுனா எம்.பி

0

வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த போது சபையில் அர்ச்சுனா எம்.பி உறக்கத்தில் இருந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

இந்நிலையில், தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவொன்றினையிட்டு வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் தனது பதிவில்,

ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தேன் வட மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ஐயாயிரம் மில்லியன் வீதி அபிவிருத்திக்காகவும் 1500 மில்லியன் வட்டு வாகல் பாலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள்.இங்க இந்தத் தடவை எதுவுமே இல்லை.கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் நிதியும் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.திருப்பி கிடைக்கப் போவதுமில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version