Home முக்கியச் செய்திகள் நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை…அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்!

நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை…அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியில் (Samagi Jana Balawegaya) தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க (Arjuna Ranatunga) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் ரணதுங்க இணைந்ததாக செய்திகள் வெளியாகியமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞன் எடுத்த விபரீத முடிவு…தீவிரமடையும் விசாரணை!

உண்மைக்குப் புறம்பானவை

“தலவாக்கலை (Talawakelle) பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் அண்மையில் மே தினப் (May Day) பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் (Palani Thihambaram) அழைப்பின் பேரில் நான் கலந்துகொண்டிருந்தேன்.

ஆனால், நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.” என்றார்.
 

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version