Home முக்கியச் செய்திகள் யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு…! பொதுமக்கள் கடும் விசனம்

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு…! பொதுமக்கள் கடும் விசனம்

0

யாழில் இராணுவ முகாமிற்கு முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பகுதி மக்கள் கவலை

மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்தரு மரங்களை தீ வைக்கும் சம்பவங்கள் வடமராட்சி கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் குறித்த விடயம் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதில் அரச அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version