Home முக்கியச் செய்திகள் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிடியாணை

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிடியாணை

0

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை (Mahindananda Aluthgamage)  கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று (16.05.2025) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற பிடியாணை

2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மகிந்தானந்தவை கைது செய்ய நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. 

இதேவேளை, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,  கடந்த14ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like this

https://www.youtube.com/embed/XbUE68GR7uw

NO COMMENTS

Exit mobile version